Saturday, 11 February 2017

Youth Role in INDIA'S Development


ROLE OF YOUTH

THE YOUTH of today is the driving force of tomorrow. It has some responsibility towards its country, which it must acknowledge and practice. Instead of blaming the system, youth should come together and mould the nation for a better tomorrow.

Youth have some responsibility towards their country. We need to learn from yesterday and live with hope for a better tomorrow. We can learn from our past how the young warriors shed their blood for the country.
We all have some responsibility towards our country, which we must understand and practice. Youth and nation have to walk hand in hand. Most importantly, the youth should be honest and hard working.

Youth should stand against all the wrong doings in the country. Instead of blaming the system, young India should come together and with their toil should mould our nation for a better tomorrow. We, the youth should use our brains, strength, creativity and imagination to serve our nation. Instead of asking, "Who’s going to fight the corruption?" we should do it ourselves. Rather than fighting upon the issues and ruining the country, we should learn to develop it.
 So we have to do our bit for the nation and be the change that we have always wanted.
The role of youth is of most importance in today’s time. It has underplayed itself in field of politics. It should become aspiring entrepreneur rather than mere workers. It can play a vital role in elimination of terrorism. Young participation is important because youth are the country’s power. Youth recognise problems and can solve them. Youth are strong forces in social movements. They educate children about their rights. They help other young people attain a higher level of Intellectual ability and to become qualified adults.
‘Youth is like a fire
It crept forward.
A Spark at first
Growing into a flame
The brightening into a Blaze’

“IT’S OUR TIME TO CHANGE EVERYTHING
WE MUST DEVELOP OUR INDIA

GET UP YOUNGSTERS

Friday, 3 February 2017

Dangerous Broiler chicken-பிராய்லர் கோழி


மதுவை விட பாதிப்பு❓
                    🐓 பிராய்லர்  கோழி🐓
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.


Thursday, 2 February 2017

Padma Shri Raamaiya and his one crore trees

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல்: 'பத்மஸ்ரீ 'வென்று பதிலடி தந்த முதியவர்!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர் தாரிப்பள்ளி ராமையா (வயது 70). காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொள்வார் ராமையா. சைக்கிள் முழுவதும் விதைகளும், மரக்கன்றுகளும் நிறைந்து காணப்படும். சைக்கிள் போய்கொண்டே இருக்கும். மரங்கள் இல்லாத தரிசு நிலத்தைக் கண்டால் மட்டுமே சைக்கிள் நின்று விடும்.

பின்னர் ராமையா அங்கே சில நாட்கள் முகாமிடுவார். கிராமத்தை, தனது மனைவியைக் கூட மறந்து விடுவார். கையோடு கொண்டு வந்த, மரக்கன்றுகளை குழி தோண்டி நடுவார். பல கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளிலேயே சென்று அந்த மரக்கன்றுகளுக்காக தண்ணீர் கொண்டு வருவார். அந்த மரக்கன்றுகள் தானாக வளரத் தொடங்கிய பின்னரே அந்த இடத்தை விட்டு ராமையா நகர்வார்.

இப்படி தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார் ராமையா. அதாவது தெலுங்கானாவில் மூன்றில் ஒருவருக்காக ராமையா மரக்கன்றுகளை நட்டுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பல நாட்கள் தனது வீட்டுக்கும் கிராமத்துக்கும் போகாமல் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் ராமையாவுக்கு, அந்த கிராம மக்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா...' மனநிலை பாதிக்கப்பட்டவர்'.

சதா... மரமும் மரக்கன்றுகளுடனும் திரிந்ததால், கிராம மக்கள் ராமையாவை இப்படித்தான் கருதினர். எப்போதாவது விருதுகள் அதற்கு தகுதியானவர்களைத் தேடி வரும்.  இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போது, அதில் தாரிப்பள்ளி ராமையாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இப்போது கிராம மக்கள் ராமையாவை மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தன்னலம் கருதாமல் மரக்கன்றுகள் நட்டதற்காக இப்போது ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

ரெட்டிப்பள்ளியில் ஒரு சிறிய வீட்டில்தான் ராமையா வசிக்கின்றார். வீடு முழுவதும் மரக்கன்றுகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பேனர்கள் சுற்றி காணப்படுகிறது. அவரது சைக்கிளும் கூட மரங்கள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவருடன்  பயணிக்கிறது. ராமையா, சைக்கிளில் பயணிக்கும் போது, இவரது கழுத்தைச் சுற்றி, ஸ்கார்ப் போல பேனர் சுற்றப்பட்டிருக்கும். அதில், 'மரக்கன்றுகளை காப்பாற்றுங்கள்.. உங்களை அது காப்பாற்றும்' என்றும் எழுதப்பட்டிருக்கும். திருமண வீடு, புதுமனை புது விழா என எந்த விழா நடந்தாலும் ராமையா சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுவதும் வழக்கமாக இருக்கும்.

தெலுங்கானா மாநிலத்தையே பசுமையாக மாற்றிக் கொண்டிருக்கும் ராமையா படித்ததோ 10ம் வகுப்பு வரைதான். ஆனாலும் சுற்றுச்சூழல் குறித்து பத்திரிகைகளில் எந்த கட்டுரை வந்தாலும் அதனை சேகரிப்பதும் ராமையாவின் வழக்கம். விருது வென்றது குறித்து ராமையா இவ்வாறு கூறுகிறார்,'' பத்மஸ்ரீ விருது வென்றிருப்பது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவருக்கு விருதா...? என்று இப்போது பலரும் புருவத்தை உயர்த்துகின்றனர். அப்படியாவது மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டால் நல்லதுதான். என்னைப் பார்த்தாவது மரக்கன்றுகளை நடத் தொடங்குவார்கள். என்னைப் பொறுத்த வரை பூமியில் மரங்கள் இல்லாத பகுதியே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மரமும் பூமியை காப்பாற்றுவதற்கான அச்சாரம்.. நான் வைத்த, எந்த மரக்கன்றுகளும் வளராமல் போனதில்லை. அப்படி மரக்கன்றுகள் வளராமல் போனால், நான் எனது வாழ்க்கையை இழந்ததற்கு சமம்'' என்கிறார்.

Respect woment and Stop harassing

*💠பெண் என்பவள் வெறும் சதையா..???💠*

🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.
🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,
🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....!_

🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,

👉 _பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....!_

🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....!_

🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,
🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.

👉 _பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....!_

*அப்போ எங்கு தான் பிரச்சனை..???*

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....!

சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..???

ஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....!

பெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....!

இந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..!!!_

*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*

*படியுங்கள்...  பகிருங்கள்...*

Tuesday, 31 January 2017

மறை நீர்-(virtual water)


பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

என்றும் சமூக உணர்வுடன்

Monday, 30 January 2017

பலநாட்டு முதலீடும் -விவசாய அழிவும் (India Economic)

இந்தியப் பொருளாதாரம் – எங்கே முடியும்?

சுதந்திர இந்தியா வளரும் வேலையில் உலகில் இரண்டு நாடுகள் வல்லாதிக்கம் செலுத்தி உலக நாடுகளை இரண்டாகப் பிரித்தது. அதில் ஒன்று, ஐக்கிய அமெரிக்கா (முதாலிளித்துவத்தை முன் வைத்து உருவானது), இன்னொன்று சோவியத் ரஷ்யா (தொழிலாளித்துவத்தை முன் வைத்து உருவானது)

எனினும், உலக நாடுகள் இரண்டாகப் பிரிய இந்தியா மட்டும் புது பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அது தான், முதலாளித்துவமும் - சமத்துவமும் இணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதாரம் ஆனது.

அந்த மூன்றாவது அணிக்கு இந்தியாவே தலைமை தாங்கியது.

அவ்வாறு கலப்பு பொருளாதாரத்தை கடைபிடிக்க என்ன காரணம் என்றால்....

ஏனைய உலக நாடுகள் ஒரு மொழி, ஒரு மதம் என்று ஒன்றினைய கூடியது, இந்தியாவில் அது சாத்தியமே இல்லை, 2 ஆயிரம் மொழி, 3000 சாதீகள் 200 க்கும் மேற்பட்ட மத நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழலை கொண்டது, முதலாளித்துவமே இருந்தாள்,

சாதி மதத்தில் பின் தங்கி இருக்கும் மக்கள் மேலும் அடிமை படுத்தப்படுவார்கள், பல அவதிகளுக்கு உள்ளாவார்கள்,

அதே தொழிலாளித்துவம் என்றால் இந்தியாவில் நில உடைமையாளர்களை நம்பியே விவசாயம் என்ற நிலையில் அது முடங்கும். எனவே இந்தியாவிற்கு இரண்டும் வேண்டும் என்று முடிவு செய்து கலப்புப் பொருளாதாரமாக ஒன்றாக இணைந்தது இந்தியா.

நேருக்கு பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடத்தில் இறக்க, அவருக்கு பின் இந்திரா காந்தி பிரதமராக தந்தை கொண்ட தலையிடா கொள்கையை உடைத்து தனிக் கொள்கையை வகுத்தார். ஆரம்பத்தில் அமெரிக்காவுடன் கூட்டு வைத்தார். பல நாட்டு முதலீடுகளை ஈர்க்க மானாடு நடத்தினார். அப்பொழுது இந்திராவை இயக்கிய அன்றைய காங்கிரஸ் தலைவர் கர்ம வீரர் எச்சரித்தார். இந்தியா விவசாயத்தை மட்டுமே நம்பிய மிகப் பெரும் நாடு, மற்ற நாடுகள் எந்தப் பக்கம் இழப்பானாலும் பல வழிகளில் அதை ஈடு கட்டும். இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி உள்ளது. எனவே இந்தியா, தொழில் துறைக்கு இரண்டாம் இடம் கொடுத்தாலே போதுமானது என்று கூறினார். கர்ம வீரர் கூறியதை இந்திரா கேட்கவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால் அதிக அளவு கடன் கொடுப்பான் என்று நம்பினார். அமெரிக்காவும் கடன் கொடுக்க முன் வந்தது. ஆனால், மொத்தமாகக் கொடுக்கவில்லை. பிசிரு பிசிராகக் கொடுத்தது. வியட்நாம் போர் ஏற்படவும் இந்தியாவை பகடை காயாக அமெரிக்கா பயன்படுத்தியது இந்திராவுக்கு தெரிய வந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சீனாவிடம் போரில் மரண அடி வாங்கியது. இந்திரா காந்தியும் பிரதமராகி இரண்டே வருடம் ஆன நிலை நேக்காக அமெரிக்காவை கழட்டி விட்டு ரஷ்யாவுடன் கூட்டணி அமைத்தார், பின்னே இந்திராவின் அசுர வளர்ச்சி அமெரிக்காவை அல்லோல பட வைத்தது. அமெரிக்கா பாக்கிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு இந்தியாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியது. விடுவாரா இந்திரா காந்தி! பாகிஸ்தானை இரண்டாக பிரித்து சிதறடித்தார்.

இந்திராவுக்கு பின் வந்த ராஜீவ் காந்தி தெற்க்காசிய கூட்டமைப்பபை ஏற்படுத்தினார். இருந்தாலும் தொழில் மோகம் முதலீடுகளை ஈர்க்கும் மோகம் குறைந்த பாடில்லை, அவரை தொடர்ந்து வி.பி.சிங், ஐ.கே. குஜ்ரால், நரசிம்ம ராவ், தேவ கவுடா, வாஜ் பேயி, மன்மோகன் சிங், மோடி உட்பட வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்க பலர் முனைந்தனர். அதற்கு அவர்கள் கொடுத்த விலை இந்தியாவின் முதுகெழும்பான விவசாய நிலம், சுதந்திர இந்தியாவில் 35 கோடி பேருக்கு 80% விவசாய நிலமாக இருந்த இந்தியா. 2015 ல் 120 கோடி பேருக்கு 35% முதல் 45% வரையாகக் குறைந்தது.

இந்த நிலை தொடர்ந்தால்... இப்படியே சென்றால்.... எங்கே செல்லும் இந்தியா? இன்னும் பத்து இருபது வருடத்தில் எல்லாம் இறக்குமதி தான்.

சரி, இறக்குமதியான பொருளை வாங்க வாங்கும் திறன் இருக்குமா என்றால்?

அரபு வளைகுடா நாடுகள் விவசாயமற்றது. எண்ணெய்களை விற்று இறக்குமதி செய்கிறது. சரி, இந்தியாவில் விவசாயமே மூலாதராம். விவசாயத்தை அழித்து விட்டு வேறு நாட்டிடம் இருந்து விளை பொருட்களை விலைக்கு வாங்கினால் எதை வைத்து வாங்குவீர்?

தொழில் தொடங்குவோம் என்றால் எத்தனை பேர் எத்தனை தொழில் தொடங்குவீர்? வாங்க ஆள் வேண்டாமா? வாங்கும் சக்தி வேண்டாமா?

எங்கே போய் முடியப்போகிறது இந்தியப் பொருளாதாரம். 

FARMERS SUICIDE IN INDIA

                   FARMERS SUICIDE IN INDIA 

India is an agrarian country.  Agriculture is the backbone of India. Yet the farmers who are the main producers of food are being pushed to a situation that leads them to commit suicide.  Farmers lack education and the only job they know is farming. Their gods are the land where they cultivate and the cattle that help them. But these two are now being targeted and diminished. According to the recent surveys farmers suicide are decreasing. They say so..  But what is the truth?  Still farmers are the ones affected by the greedy businessmen and greedy middlemen. Their death tolls are still on the rise.. But the truth is hidden from the society.  People will pay no attention to the tortures faced by farmers since there is still availability of food in the nation.  But the slow disappearance of farmers from our country will not only effect our food supply but also economy will be effected. More and more food products will be imported than exported. It will effect the nation economically. We will be indebted to other countries and the condition will persist to be. Farmer suicide is not an issue faced by only a few states of our country..  But it's a problem of our nation as a whole.


Agriculture is an unorganized sector. It doesn't have an systematic institutional or organizational planning for cultivation, irrigation, harvesting etc. The plans by the government doesn't reach the marginal farmers. The ground reality is that the farmers nowadays have very small land (at most 2 hectares)of their own for cultivation. Cultivation in such small areas is not economically feasible. Thus the farmers become vulnerable. Sometimes they have to pay part of their earnings to their landlords. Another problem faced by the farmers are the money grabbing middlemen. The agricultarists do not get the deserved selling value for their crops due to the middlemen and greedy businessmen. To abolish this problem the government should promote the plan called "ULAVAR SANTHAI"(FARMERS MARKET ), where the farmers can directly sell their products at reasonable price. Also we can help the farmers by buying vegetables from them without bargaining. We do not bargain at malls and supermarkets!! Those big businessmen earn easily by doing nothing and the poor farmers give away their lives due to lack of money even after toiling hard for months. The schemes by the government do not reach the small farmers.  On the contrary, big landlords are benefitted by such schemes. One of the worst problems faced by the present day agricultarists is real estate mafia! Even the fertile lands best suited for agriculture are being sold to the real estate where they are being divided as plots and sold at high prices.  Strict measures against land grabbing must be implemented. The main reason for farmer suicide is indebtness and debt burden. The high interest rates by the loan lending people and the exorbitant rates at which the farmers are forced to return the money and the lack of income causes the poor farmers to take their own lives. Some farmers commit suicide along with their family.
 Exorbitant interest rates should be declared illegal and the people disobeying need to be punished by law. Strict measures need to be undertaken for the greedy moneylenders. As the youth of the nation, we must raise our support for agriculture. Agriculture is the backbone of India and we, the youngsters are the pillars of our nation.  Farming is not something to be ashamed of.  It is something everyone must praise. Food is a necessity for life and so are the producers I.e. our farmers.  The state and central government are taking steps to help the farmers. But we must help those schemes reach them. As educated individuals we must make it our duty to educate the farmers so that they can know about the schemes provided by the government. And about the advanced methods of farming. Crop rotation, rain water harvesting, etc. can help the farmers if they get the awareness about them. Like industrial sectors there should also be agricultural  zones where only agriculture related activities will be allowed.  Shortage of water and managent of water is another problem. Better methods of irrigation should be developed. Participation of youth in agriculture is economically possible. It can be attained by introduction of new technologies. We must create awareness about alternative methods of income to the farmers. Like skills other than farming can be taught to them. And animal husbandry or fisheries, timber production etc.

This is the time for change. Let the change begin with the factor that has always made our nation stand strong. No one else is going to be part of the change unless you are!  Every little action creates a difference. Let this be a more humanitarian approach than an economic one. Let's not forget that we are a net agricultural food producing country.  As agricultarists we must be united. We must avoid the corporate lobbies hidden business tricks and help farmers. The government should facilitate farming by giving good options to the farmers. The governing body must know that without us they cannot work. We must know..  Our next generation must know that 'it is a pride to be a farmer'. The struggle of the farmers is the struggle of each one of us.. Our families.. Now is the time to be united. Forget the differences and fight for our family.. Our farmers.. Our nation.!
                           "Stop farmer suicide" 
                         "SAVE OUR FARMERS"
                                   Jai Hind!  

Bhavani River water is in danger

Bhavani river water is unsafe for consumption

If you are in Mettupalayam, think thousand times before taking a sip to quench your thirst. According to a report by Tamil Nadu Water Supply and Drainage Board, Bhavani riverwater, which is supplied to 1.5 lakh residents of Mettupalayam for potable purpose, is unfit for consumption. The report dated October 19, 2016, states the water is chemically not potable as the turbidity and iron values exceed permissible limits. Also, the water is bacteriologically unsafe due to the presence of faecal coliform, the source of which is human and animal excreta.

The main sources of Bhavani river water contamination were found to be untreated water discharged to it by industrial units and the 28 canals carrying sewage water from the municipality.


The river was free flowing until 2000. But in 2001, Erode unit of the Tamil Nadu Electricity Board (TNEB) set up two barrages in the river, one at Samayapuram and another at Omapalayam to generate electricity. The projects, implemented at a cost of Rs150 crore, were aimed at generating 20MW power. But, they have been able to generate only 8MW power. RTI replies also revealed that the projects had not received several clearances aprojects.

Respect and save women

RESPECT AND SAVE WOMEN
Women are the most important section of the society and equally participate in the life existence on the earth. However, regular decrease in the sex ratio of female in India because of the crimes against women, it has created the fear of total finish of women. So, it is very necessary to save girl child in order to maintain the ratio of women in India. It has been a most important topic as a social awareness in the Indian society which youths of the country must know about.
India is a most famous country all over the world for its great tradition and culture where women are given most respected place in the society from the ancient time. It is the country where women are considered as safer and most respected
Girls are equally as important as boys in the society to maintain the social equilibrium crimes against women such as female foeticide, dowry deaths, rape, poverty, illiteracy, gender discrimination and many more. To equalize the number of women in the society, it is very necessary to aware people greatly about the save girl child.
Anywhere in the world, a rape is a disgraceful criminal act, irrespective of whether the woman is a wife, sex worker or daughter of the man. Yes, several such perversions of fathers raping daughters have come to light in India and other countries. Actually rape is just one crime against women. The several other outrageous discriminations in India are: killing the girl child either before or after birth, giving dowry, dowry deaths, forced marriage, honour killing,widow seclusion, molestation and caste-related bigotry opposing women's lawful rights. Not even a sex worker can be raped as she represents the dignity of women in society.
Every Guy wants to get married to a Virgin Girl But they Don't want to leave any Girl a Virgin Before marriage.
Dear Guys.Stop judging Girls on the Basis of their virginity Stop Behaving like hypocrites
Women are harassed not only in the night or evening but also in the day time at their home, working places, or other places like street, club, etc. It is found through the survey that the reason of sexual harassment is the lack of gender-friendly environment and improper functional infrastructure such as consumption of alcohol and drugs in open area, lack of adequate lighting, safe public toilets, sidewalks, lack of effective police service, lack of properly working helpline numbers, etc. A huge percentage of women have no faith that police can curb such harassment cases. There is an urgent need to understand and solve this problem of women safety so that they can also grow equally like men in their own country.
Stop violence against women”
If you kill girls, who will give birth to next generations.

Time for youngsters-புதிய பரிணாமத்தில் மாணவர் புரட்சி


*மெரினா இளைஞர் புரட்சி உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்*

இளைஞர்களே இனியும் நாம் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.

இவ்வருடம் நம் தமிழ்நாடு இந்தியாவே எதிர்நோக்கும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க போகிறது.

முதல்வரின் மரணத்திற்கு பிறகு வரும் இத்தேர்தலில் வெற்றி பெற போவது ஆளுங்கட்சியா அல்லது எதிர்கட்சியா?

என்னை பொறுத்தவரை இத்தேர்தல் தள்ளிப் போனதற்கு காரணமே *தமிழ்நாட்டில் இளைஞர்களால் ஒரு மாற்றம் வர வேண்டும் என்றே*

இளைஞர்களே இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா???

உங்களால் இது சாத்தியமே.

*உங்கள் வார்டில் உள்ள அனைத்து இளைஞர்களும், பொது மக்களும் உங்களில் ஏரியாவில் உள்ள பூங்காவிலோ அல்லது பொது இடங்களிலோ கூடுங்கள்.*

உங்கள் வார்டில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிடுங்கள்.

திறமையான, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய இளைஞரை தேர்வு செய்யுங்கள்.

உள்ளாட்சி தேர்தலில் அந்த இளைஞரை சுயேட்சை நிற்க வைத்து வெற்றி பெற செய்யுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலோடு முற்றுப் புள்ளி வையுங்கள்.

நீங்கள் தேர்வு செய்யும் இளைஞர்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க, தேர்தல் முடிந்த பின், ஒவ்வொரு மாதமும் பொது இடத்தில் வைத்து அவர் செய்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதியுங்கள். நல்ல மாற்றத்தை இந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து துவங்குவோம்.

தயவு செய்து இனியும் எக்கட்சியையும் ஆதரித்து உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதீர்கள்.

*இனி ஒரு விதி செய்வோம்*

Tobacco - Human Assasinator

Tobacco - A Human Assasinator

Tobacco smoking is already a major health problem in India and one that will worsen unless we act. Smoking alone is estimated to cause nearly 10 lakh deaths a year in India. About 1/3rd of Indian men now smoke; the number of women who smoke is lower but the health risks are just as dangerous for both. 70% of deaths from tobacco use occur during middle age when people are still in the most productive part of their lives and not in the old age.

Chewing tobacco products such as gutka is common in India. Chewing causes over half of the deaths from oral cancers and women are especially hard hit. More young people are now chewing and pre-cancerous conditions such as mouth lesions are increasing among youth.
 
Few Facts On Tobacco Usage
  •  Chewing is common among men and women all over. In India 31% men and 19% women chew tobacco products and the percentage of people chewing in Bihar is much higher with 69% men and 22% women addicted to tobacco products. Tobacco use by pregnant women leads to low birth weight babies,still births and birth defects. 
 
  • Chewing is more common among the poorest as per Global Adult Tobacco Survey India 2010.About 30% of poorest,25% of middle income group and only 15% of higher income group people chew tobacco products. 
 
  • Women who chew tobacco have especially high risks of dying from oral cancer.3.8% of women in the age –group 30-69 years face relative risk of dying from chewing than 1.5% of men. The relative risk of dying from oral cancer is greater among women but men have higher background death rates so the absolute risks are more equal.
 
  In Kishanganj 1,00,000 men in the age-group 15-69 years smoke of these 50,000 will be killed by smoking.70% will die during their productive years of 15-69 while 30% will die in the old age. More men about 59% smoke in Bihar in 2015 then previous years.612 lakh men who smoke cigarettes lose 10 years of life where as 687 lakh men who smoke bidis lose 6 years of life.

The usage of tobacco is not just costing lives but it is imposing economic burdens on our country’s health care systems that force health facilities to spend a great share of their precious resources in treating largely preventable diseases. Tobacco use also costs individual families as the cost of treatment for serious diseases like cancer or stroke can push families into poverty.

Tobacco use pushes 28,000 people into poverty every year in Kishanganj.Tabacco costs the district Rs. 11 crore every year. Police have an important role in the implementation of tobacco control laws. Of 1000 policemen who smoke 350 will be killed by tobacco at ages 15-69 a staggering figure.

Smoking cessation is the single most important action smokers can take to improve their health and lengthen their lives. But quit rates in India are very low at 5%. Quitting by age 40 and preferably earlier, avoids nearly all the risks. After quitting within 12 hours carbon dioxide levels decrease and oxygen levels increase. Within 3 months, heart attack risk drops and lung functions improve. Within 1 year, risk of sudden heart attack is cut in half and within 5 years risk of cancer of the mouth, throat, esophagus and bladder is halved.

Section 4 of the Cigarettes and other Tobacco Products Act (COTPA) prohibits smoking in public places defined as any place to which the public have access whether as of right or not, but does not include any open space. Smoking is also prohibited at open spaces that are visited by the public like open auditoriums, stadiums, railway stations, bus stops and other such places. Individuals smoking in a public place are liable to pay a fine of up to Rs 200.

Please , Avoid consuming such products which are not good for our health & society .. 

Source : Ministry of Health and Family Welfare ( Govt of India) 

Save Bhavani River

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ---

பவானி ஆற்றில் மின் உற்பத்திக்காக நிறுவப்பட்டுள்ள இரண்டு கதவணைகளால் ஒட்டு மொத்த பவானி நீரும்
சாக்கடைக்கழிவுகள் ,
தொழிற்சாலைக்கழிவுகள்,
அரசு மருத்துவமனை பிணவறைக் கழிவுகள் நேரடியாகக் கலந்து
கழிவு நீர் குட்டையாக காட்சியளிக்கிறது.
இந்த கழிவு நீர் தான் சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்காக வழங்கப்படுகிறது.

நகராட்சியால் விநியோகிக்கப்படும் பவானி ஆற்றின் நீர் குடிக்க தகுதியற்றது என நீர் பரிசோதனை ஆய்வக அறிக்கைகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இந்த கழிவு நீர் கலந்த குடிநீரால் பொதுமக்கள் எண்ணற்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

*ஆகவே இந்த கதவணைகளை நிரந்தரமாக திறந்து விட வேண்டும்.*

விவசாயம் முற்றிலும் அழிந்து போனது.

*கேரள அரசு பவானியின் குறுக்கே முக்காலி பகுதியில் தடுப்பணை கட்டி வருகிறது. இதனை தமிழக அரசும் மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும். கோவை மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டத்திற்கு உயிர் நீர் பவானி நீர்*

*பில்லூர் அணையை உடனடியாக தூர் வார வேண்டும். சகதிகளால் 55 அடி மண்டிக் கிடக்கும் பில்லூர் அணையில் 22 அடி மட்டுமே நீர் தேக்க முடிகிறது.*

*மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு சுத்தமான பவானி நீர் விளாமரத்தூர் பகுதியில் இருந்து உடனடியாக கொண்டு வர வேண்டும். தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலந்த குடிநீர் வேண்டாம்*

பவானி நதியை அழிவிலிருந்து காக்க உதவுங்கள்..

பவானி நதி நீர் விஷமாகிப் போனது..

நண்பர்களே!
பொதுமக்களே!
         

""" நதி யாரோ
           ஒருவருக்கானதல்ல !
     எல்லோருக்குமான
              பிரம்மாண்ட கடவுள்!
முதலில்
       கடவுளைக் காப்பாற்றுங்கள் !
பின்னர் கடவுள்
உங்களைக் காப்பாற்றுவார் !

A farmer's simple question to district collector

விவசாயி போட்ட கணக்கு.. கிறுகிறுத்த கலெக்டர்!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் செங்குட்டுவன் என்ற விவசாயி போட்ட கணக்கில் மாவட்ட ஆட்சியருக்கு தலைசுற்றியது. இதையடுத்து அவரால் பதில் எதுவும் பேசமுடியாமல், சிரித்து மழுப்பி விவசாயியிடமிருந்து தப்பிச் சென்றார்.

                     விவசாயின் பட்டியல்

1970 ஆண்டுகளில்..

எம்.எல்.ஏ. சம்பளம்                - ரூ.150
பேங்க் மானேஜர்                     - ரூ.250
 ஆசிரியர் சம்பளம்                - ரூ..90
60 கிலோ நெல் மூடைக்கு      - ரூ.40
 கரும்பு டன் ஒன்றுக்கு            - ரூ.90

ஆனால் இன்று..
எம்.எல்.ஏ. சம்பளம்.         -ரூ 55,000
பேங்க் மானேஜர்.              -ரூ 66,000
ஆசிரியர் சம்பளம்.           - ரூ 39,000
60 கிலோ நெல் மூடைக்கு   - ரூ.880
 கரும்பு டன் ஒன்றுக்கு      - ரூ.2850

மத்திய அரசு 7-வது ஊதியக்குழு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு இந்த விகிதாச்சார அடிப்படையில்
கரும்பு டன்னுக்கு ரூ.39 ஆயிரமும்,
60 கிலோ நெல் மூடைக்கு ரூ.18 ஆயிரமும்,வழங்க வேண்டும் என்று விவசாயி செங்குட்டுவன் வலியுறுத்தினார். இல்லையெனில், கரும்பு ஆலையில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்று யோசனையையும் மாவட்ட ஆட்சியரிடம் முன்மொழிந்தார்.

Sunday, 29 January 2017

AGRICULTURE




Jallikattu protest

"#மீண்டும்_ஒரு_துரோக_வரலாறு

"தீ ....
தன் எதிரிகளை எரித்து சாம்பல் ஆக்கி விட்டது" என்ற தகவளோடு  கட்டுரையை நான் தொடங்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்."
ஆனால் "தீ தன்னை சார்ந்தவர்களையே எரித்து சாம்பலாக்கி உள்ளது "
என்று  அல்லவா நான் எழுத தொடங்க வேண்டி இருக்கிறது.

அதை எரித்தது வேறு யாரும் இல்லை நம்ம காவல் துறை என்பதை அல்லவா நான் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

எட்டு நாள் ......
கொட்டி செல்லும் பணி, சுட்டு செல்லும் சூரியன் இரண்டையும் எதிர் கொண்டு அலையின் சத்தத்தை கோஷத்தாலும் அலையின் விடாமுயற்சியை போராட்டதாலும் முறியடித்து ..
மக்களை மலைக்க வைத்து அரசை அசரவைத்து உலகை உற்று பார்க்க வைத்து போராடிய இளைஞர்களின் இலக்காண அந்த நிரந்தர ஜல்லிக்கட்டு மசோதா, 23 மாலை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய போது...
அதை கொண்டாட யாரும் இல்லாமல் போன பரிதாபத்தை என்னவென்பது.?

காரணம் அன்று அதிகாலையே...வெண்ணை திரண்டு வரும் போது பானை உடைந்து விட்டிருந்தது.
அந்த உடைந்த பானை தன் ஓட்டை வழியே பல சந்தேகத்தை ஒழுக விட்டிருக்கிறது.

அந்த மசோதா மாலை நிறைவேறுவது இவ்வளவு நிச்சயம் எனும் போது அதை முடித்துவிட்டு வெற்றியோடு சென்று போராட்டத்தை முடித்து இருக்கலாமே.
இனிப்புடன் சென்று இனிமையாக போராட்டத்தை தட்டி கொடுத்து முடித்து வைத்திருக்கலாமே...
அந்த 'அதிகாலை அவசரம் 'ஏன்?

அந்த அவசரத்தை சற்று கவனியுங்கள்..
அதிகாலை கலைந்து போக சொல்லி ஒலிபெருக்கியில் காவல் துறை அறிவித்ததும். தங்களுக்கு அரை நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்கிறது போராட்ட குழு அதற்கு காவல் துறை செவி சாய்க்க மறுக்கிறது.
பிறகு தங்களுக்குள்ளாக பேசி விட்டு...
 "4 மணி நேரம் அவகாசம் கொடுங்கள்..
இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்ந்திருக்கிறோம் திடு திப்பென்று களைந்து போக சொன்னா எப்படி? நாஙக எங்க வக்கீல் உடன் பேச வேண்டும் மற்றும் மற்ற ஊர் போராளிகளுடன் ஆலோசிக்க வேண்டும். "
என்ற கோரிக்கையையும் காவல் துறை மறுக்கிறது..
பிறகு வெறும் 2 மணி நேரம் கொடுங்கள் என்று கேட்டு பார்க்க 2 நிமிட அவகாசம் கூட கொடுக்காமல் போராட்டத்தை கலைக்கிறது .
அப்படி அவர்களை அவகாசம் இன்றி கலைக்க வேண்டிய அவசியம் என்ன? அப்போ எப்படி பட்ட உத்தரவு உங்களுக்கு தர பட்டு இருக்கிறது.?

"அவகாசம் கொடுத்தால் பேசிவிட்டு நாங்கள் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்" என்று சொன்னவர்களுக்கு நீங்கள் இடம் கொடுகாதது ஏன்?

இது நடந்து கொண்டிருக்கும் போதே மீடியா
" போராட்டத்தை அவர்களாக வாபஸ் பெற்றார்கள் " என்று அறிவித்து கொண்டிருந்தது.
அப்படி அறிவிக்கவேண்டிய தேவை என்ன உங்களுக்கும் அதே அவசரம் இருக்கிறதே ஏன் அப்படி?

அதனை தொடர்ந்து சில பேர் கடலில் இறங்க போவதாக சொல்ல போலீஸ் செய்வது அறியாமல் தயங்கி அங்கேயே நிற்கிறது....
இதனை தொடர்ந்து நடந்தது எல்லாமே பேர் அதிர்ச்சி...

கடந்த ஒரு வாரமாக உலகமே நமது போராட்டத்தை புகழ்ந்து தள்ளி கொண்டிருந்ததற்கு திருஸ்டி பட்டதை போல கலவரம் வெடிக்கிறது.
போலீஸ் தடியடி கல்வீச்சில் ஈடுபடுகிறது.
புகை குண்டை வீசுகிறது.
ஆங்காங்கே வாகனங்கள் தீ வைத்து கொளுத்த படுகின்றன .
திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் தீ வைக்க படுகிறது.
ஒருவர் இறந்து விட்டதாக ஒரு பெண்மணி கர்ப்பம் கலைந்து விட்டதாக வதந்தியா உண்மையா என்று தெரியாத தகவல் வருகிறது.
மெரினா செல்லும் 8 வழியை போலீஸ் அடைகிறது.
அதை மீறி கடல் மார்க்கமாக மாணவர்கள் மெரினா சென்று இறங்கு கிறார்கள்.

அதன் பின் ஆங்காங்கே நடந்த நிகழ்வுகளை சில பேர் படம் பிடித்து முகநூல் மற்றும் பகிறியில் விட்ட சில வீடியோ வை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
காரணம் அதில் கலவரம் செய்தது வேறு யாரும் அல்ல அது  காவல் துறையே தான் என்பது தெரிகிறது.

ஒரு காவலர் எரியும் காகிதத்தை எடுத்து வந்து ஆட்டோவை கொளுத்துகிறார்.

ஒருவர் வீட்டு அருகில் நிற்கும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைக்கிறார்.

ஒருவர் கையில் கல்லோடு கலவரத்துக்கு தயராவதை நிருபர் வீடியோ எடுக்கிறார் அதை பார்த்த காவலர் ஓடி வந்து இவரை தாக்குகிறார்.

ஒருவர் கீழே கிடக்கும் பைக்கை அடித்து நொறுக்குகிறார்.

ஒருவர் ஒரு பெண்ணை போட்டு அடித்து நொறுக்குகிறார்.

ஒரு இளைஞர் தான் வீட்டில் இருக்கும் போது காவலர்கள் வந்து அடித்துவிட்டதாக உடலெங்கும் காயத்துடன் பேசுகிறார்.

ஒரு கர்ப்பிணி பெண் தன்னை கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்கியதாக சொல்கிறாள்

ஒரு கும்பல் தேசிய கீதம் பாடுவதை சட்டை பண்ணாமல் காவல் துறை கும்பலை அடித்து தூக்கி செல்கிறது.

மெரினாவில் கீழே வீழ்த்தி சட்டையை கிழித்து ..ஏதோ தீவிரவாதியை பிடிப்பதை போல பிடிக்கிறார்கள் காவலர்கள்.

ஒரு மீனவ நடுத்தர வயது பெண்மணி தன் நெஞ்சில் அடித்து கொண்டு "ஐயோ எம்மக்கள் சாவறாங்களே " என்று கதறி அழுகிறாள்.

ஒரு மீனவர் இரண்டு கைகளிலும் செருப்பை மாட்டி கொண்டு தன் தலையில் பட் பட்டென அடித்து கொண்டு..
" வாங்க டா வந்து என்ன அடிச்சிக்கோங்கடா " என்று கதறுகிறார்.

குடோனில் ஒளிந்து கொண்டு தங்களை காவலர்கள் தாக்குகிறார்கள் என்று ஒரு 10 இளைஞர்கள் பேசி அனுப்புகிறார்கள்.

ஒருவர் முகத்தில் ஒழுகும் ரத்ததோடு பேட்டி கொடுக்கிறார்.

ஒருவர் மயங்கி விட்டாரா இல்லை இறந்து விட்டாரா என்ற சொல்ல முடியாத நிலையில் துவண்டு போய் இருக்க அவரை போலீஸ் காரில் தூக்கி போடுகிறார்.

வடபழனியில் துப்பாக்கி சுடுவதாக காட்டுகிறார்கள்.

போராட்டகாரர்களை அடித்து உணவு பொட்டலங்களை பறித்து போலீஸ்  உண்ணுகிறது

வீதியில் மக்களை கண்மூடி தனமாக தாக்குவதை மொட்டை மாடியில் இருந்து ஒருவர் படமெடுத்து அனுப்புகிறார்...

இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காட்சிகள் நீண்டு கொண்டே போகிறது.(பதிவானது இவ்வளவு இன்னும் ஆகாதது எவ்வளவோ)

இதனை நாளாய் ஒரு சைக்கிளை கூட எரிக்காமல் போராடி கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.
போக்குவரத்துக்கு கூட இடைஞ்சல் செய்யாமல் 40 லட்சம் பேர் போராடினார்கள்.
தான் சாப்பிட்டு போட்ட குப்பைகளை கூட சுத்தம் செய்த படி மிகுந்த ஒழுக்கத்தோடு போராடினார்கள்.
தன்னை மெரினாவில் கைது செய்ய வந்த போது காலில் விழுந்தும் கடலில் வீழ்ந்தும் தான் போராடினார்களே தவிர யாரையும் எதிர்க்க வில்லை.
அப்படி இருக்கும் போது அவர்கள் மேல் இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டிய காரணம் என்ன ?
இவ்வளவு நாள் தானே ஆதரவு அளிப்பதாக சொன்ன காவல் துறை இன்று குழந்தைகள் பெண்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அடித்தது நொறுங்கியது ஏன்?

இவளவு நாள் வரலாற்று போராட்டத்தை லைவ்வில் காட்டாத அந்த இரண்டு பெரும்
கட்சி தொலைக்காட்சிகள் இன்று அணைத்து கலவரத்தையும் லைவில் காட்டியது ஏன்?

கலவரமே நோக்கமாக பின்னணியில் செயல்பட்டது யார்? ஏன்?

இவ்வளவு நாள் இணைந்து போராடிய ஹிப் ஹாப் தமிழா .சேனாதிபதி ஆர். ஜே பாலாஜி இவர்கள் திடீரென பின் வாங்கிய பின்னணி என்ன.?

எங்கே டா இவர்களை வெற்றி வீரனாக பாராட்டி மசோதாவை கையில் கொடுத்தால் இவன் திமிராக உடனே அடுத்ததாக விவசாயம் ..காவேரி ..லஞ்சம் ஊழல் என்று கையில் எடுப்பான் என்பதால் கலவரம் செய்து அதன் பின் மசோதாவை நிறைவேற்றினீர்களா?

ல்லது ஜனவரி 26 கு உங்களுக்கு மெரினா தேவை படுவதால் மத்தியில் இருந்து வந்த அழுத்தமா?

ஆட்சியை கெடுக்க இதர சக்திகள் செய்த கலவர சதியா?

தேச துரோக சக்தி இதை தூண்டியதா.?

15 நாள் தொடர்ந்து முடிவு இல்லாமல் ஒரு நாட்டில் போராட்டம் நடந்தால் அந்த ஆட்சி களையும் என்ற சட்டத்திட்டத்திற்கு பயந்து போனீர்களா?

உங்களுடைய எந்த போதைக்கு மாணவர்களை ஊறுகாய் ஆக்கி கொண்டீர்கள்.??

*இதையெல்லாம் விட தலையாய கேள்வி ஒன்று உண்டு*...
*மாநில அரசு சட்டமன்றத்தில் கூடி இந்த சட்டத்தை நிறைவெற்றி விட முடியும் அந்த அதிகாரம் இதற்கு இருக்கிறது எனும் போது அதை 3 வருடமாக செய்யாமல் விட்டது ஏன்?*

தமிழன் எதிரியால் அல்ல எப்போதும் துரோகத்தால் தான் வீழ்த்த படுகிறான் என்ற வரலாறை மீண்டும் எழுதிய துரோகி யார்?

ஆயிரம் ஆண்டு கலாச்சார அழிவை உடல் பொருள் ஆவி கொடுத்து போராடி மீட்டு தந்தவனை .... ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை கையில் எடுத்து செய்து முடித்தவனை... நீங்கள் கோவில் கட்டி கொண்டாட வேண்டாமா?

அவனுடைய போராட்டத்திற்கு அவனுடைய தியாகத்திற்கு நீங்கள் தரும் மரியாதை இது தானா?
சுதந்திர போராட்டம் போல புனித போராட்டம் நடத்தி காட்டியவன் மண்டையை உடைத்ததில் உங்களுக்கு மனசாட்சி உறுத்த வில்லையா?

என்ன காரணமோ ..என்ன அரசியலோ என்ன சதிவேலையோ ..பின்னணி என்னவாக இருந்து தொலைக்கட்டும்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

ஊதி அணைத்து விட தீ குச்சியாய் இன்று அவன் இல்லை இன்று அவன் பெரும் நெருப்பாய் சூரியனாய் மாறி நிற்கிறான்.
அவனுக்குள் இருக்கும் லட்சிய வெறியை உலகமே பார்த்து விட்டது.
இனி அவனை ஆயிரம் கலவரம் செய்தும் உங்களால் தடுக்க முடியாது.
நீங்கள் செய்த துரோகத்துக்கு அவனிடம் கைகட்டி பதில் சொல்லும் நாள் ஒரு நாள் நிச்சயம் வரும்.
இனி வரலாறு ஒரு போதும் முன் போல இருக்க போவது இல்லை.

போராடிய அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்..வணக்கங்கள்.

நன்றி !!!

Avoid made in China products

1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா நியூக்கிளியர் அணு  குண்டு வீசியது...

71 ஆண்டுகள் கழித்தும் அமெரிக்காவால் ஒரு கண்டு ஊசி கூட ஜப்பானில் விற்பனை செய்ய இயலவில்லை.

ஜப்பான் அரசு அமெரிக்க நாட்டு பொருட்களுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை.

நம் நாட்டின் மீது இப்படி ஈவு,இரக்கம் இன்றி நச்சு அணுகுண்டு வீசி விட்டதே என மக்களே எடுத்த தீர்க்க முடிவு.

ஆனால் நாம் சீன போரில் நம் கயிலாயத்தையும் இழந்து நமக்கு தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகளை தரும் சீன பொருட்களை வாங்குகிறோம்.

ஜப்பானியர் தேசப்பற்று எங்கே?.

நம் இந்தியர்களின் தேசப்பற்று எங்கே?.

மாற்றம் அவசியம்.

Say No To foreign Products



Hai friends..
Hope you d have seen d above images.. Can we relate all these..!!! You may not believe this.. Due to protest in TamilNadu against coke pepsi...  They are to be banned in tamilnadu..  And by this initiation all foreignproducts will be avoided through india.. So all MNC'S and Foreign companies will face a great Economic loss..! We may think it's impossible but the reality is that our national economy will rise up to the economy of other Developed countries .. As for now, these companies have invested in India, so what if no one consumes those Products & every indian uses only Indian Products? & if that happens, National income will increase, Indians get employment in the Indian companies such that our nation's human resources are used for the development of our nation. When the foreign commodity usage gets reduced, the nation's product export exceeds that of foreign product import, and this, in turn, will increases our nations ecconomy
         
This Is The First Step of every Indian To Make Our Nation Grow into a Well-Developed Nation
Thanks For The initiative taken by TAMIL NADU YOUNGSTERS.

                   

Methane - The Killer


மீத்தேன் என்னும் எமன்

எங்கேயோ போடப்போகும் ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன
வந்தது என்று எண்ண வேண்டாம் தோழமைகளே..

  1. நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க நிலக்கரி இருக்கும் மட்டம் வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
  2. கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும் தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.
  3. அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.
  4. கடல் நீர் உள் நுழையும்.
  5. நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.
  6. கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும்.நிலநடுக்கங்கள் ஏற்படும் .
  7. குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப் போகும்.
  8. மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இட பயன்படுத்திய ரசாயனங்கள், மீத்தேன் ஆகியவை கலக்கும்.

இச்செயல் முறை மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக நாசம் செய்யும். ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும் இடம் 691 சதுர கிலோமீட்டர். ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர் அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும். மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000. அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும் மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூரும் தான். இதனால் காற்றும் மாசுபட போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம். ஒட்டுமொத்தமாக இப்பகுதி பாலைவனமாய் மாற போவதால் 50 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கிறது..சென்ற அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டம் காரணமாய் இந்த அரசு தற்காலிகமாய் நிறுத்தி வைத்துள்ளது.இந்த ஒப்பந்தம் மட்டும் மீண்டும் தொடர்ந்தால் ...............

தமிழகத்தை யாராலும் காப்பாற் இயலாது. .அதற்கு முன் மக்கள் விழித்தெழ வேண்டியது மிக அவசியம் மற்றும் அவசரமும் கூட.


Hope You All got What this is all about ... This is not a State's problem but a problem of the World's inhabitants.. It continues to affect our Mother Land if we dont do anything.. Please Act My dear young Youths Of The nation !!!